லக்னோ:

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் என உ.பி அரசு அறிவித்துள்ளது.

உ.பி.துணை முதல்வர் தினேஷ் ஷர்மா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘உ.பி. மாநிலத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு அரசின் சார்பில் தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும்.

இதன் மூலம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒரு லட்சத்திற்கும் அதிகமான பள்ளி மாணவிகள் பயனடைவர்’’ என்று தெரிவித்துள்ளார்.