சென்னை:

மிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான  2வது கட்ட தேர்தல் நாளை மறுதினம் (30ந்தேதி) நடைபெற உள்ளதால், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்வுபெறுகிறது.

தமிழகத்தில் புதியதாக தொடங்கப்பட்ட 9 மாவட்டளைத்தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரகப்பகுதி களுக்கு உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்கட்ட வாக்குப் பதிவு நேற்று (27ந்தேதி) முடிவடைந்த நிலையில், 2வது கட்ட வாக்குப்பதிவு 30ந்தேதி (நாளை மறுதினம்) நடைபெற உள்ளது.

இந்த 2வது கட்ட தேர்தல்  158 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற உள்ள நிலையில், அந்த பகுதிகளில் தேர்தல் பிரசாரம்  இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது.

2வது கட்ட தேர்தல், 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 4,924 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் வருகிற 30ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.