சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முதல் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில்,   வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து விட்டதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் 27 மற்றும் 30ந்தேதி நடைபெற்ற நிலையில், ஜனவரி 2ந்தேதி (நேற்று) வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், இன்று மாலையுடன் வாக்கு எண்ணிக்கை பணி நிறைவடைந்து உள்ளது.

ஊரக உள்ளாட்சியில் உள்ள  513 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்ற தேர்தலில் 512க்கு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், அதிமுக கூட்டணி 240 இடங்களிலும், திமுக கூட்டணி 270 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதில் திமுக 247 இடங்களிலும், அதிமுக  213 இடங்களிலும்வெற்றி பெற்றுள்ளது.

அதுபோல,  5,067 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில், திமுக கூட்டணி 2,356 இடங்களிலும், .அதிமுக கூட்டணி 2,136 இடங்களிலும்  வெற்றி பெற்றுள்ளது. அதில் திமுக மட்டும் 2,110 இடங்களையும், அதிமுக1,797 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

‘ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி, 95 இடங்களை கைப்பற்றியுள்ளது.

சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரே ஒரு இடத்தை மட்டுமே கைப்பறி சாதனை படைத்துள்ளது.