மாஸ்கோ: ரஷ்யாவில் 6,615 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
உலகளவில் 200 நாடுகளை கொரோனா தொற்றும் இன்னமும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 2வது இடத்திலும், இந்தியா 3வது இடத்திலும் இருக்கின்றன.
4வது இடத்தில் உள்ள ரஷ்யாவிலும் பாதிப்புகள் அதிகம் காணப்படுகின்றன.  இது பற்றி அந்நாடு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 24 மணி நேரத்தில் 130 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 335 ஆக உயர்ந்துள்ளது.
6,615 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த பாதிப்பு 7 லட்சத்து 27 ஆயிரத்து 162 ஆக உயர்ந்து இருக்கிறது. இதுவரை 5 லட்சம் பேர்  குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.