மாஸ்கோ: ரஷியாவில் 24 மணிநேரத்தில் மேலும் 10,253 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

கொரோனா 2ம் அலையால் ரஷியாவில் பாதிப்பு ஒரு சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந் நிலையில் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. புதியதாக 10,253 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,33,3,029 ஆக அதிகரித்து உள்ளது. ஒரேநாளில் 379 பேர் பலியாக இதுவரை அந்நாட்டில் 89,473 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதித்த 3,922,246 பேர் அதன் பாதிப்பில் இருந்து குணம் பெற்றுள்ளனர்.