மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் புதியதாக 26,402 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ரஷியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில், அந்நாட்டு சுகாதாரத் துறை கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதியதாக 26,402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 23,22,056 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் மாஸ்கோவில் 6,524 பேர் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 569 பேர் பலி, இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 40,464 பேர் உயர்ந்துள்ளது. இன்னமும் 4,78,125 பேர் சிகிச்சையில் உள்ளனர்.