மாஸ்கோ: ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 20,582 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி அந்நாட்டு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,582 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஒரு நாளில் பதிவான அதிக பாதிப்பாகும் என்று கூறி உள்ளது.

அதிகபட்சமாக மாஸ்கோவில் 6,253 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, ஒட்டு மொத்தமாக 1,733,440 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 24 மணி நேரத்தில் 378 பேர் பலியாகியுள்ளனர்.

இதன்மூலம் பலியானவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 29,887 ஆக அதிகரித்துள்ளது. 24 மணிநேரத்தில் 16,955 பேர் குணமடைய, இதுவரை மொத்தம் 1,296,124 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது.