மாஸ்கோ

ஸ் பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு ரஷ்ய தமிழ் சங்க நிர்வாகி திரு ஜி எஸ் விஜயகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார்

பிரபல பாடகரும் நடிகருமான எஸ் பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு உலகெங்கும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவ்வகையில் ரஷ்ய தமிழ் சங்க நிர்வாகி திரு ஜி எஸ் விஜயகுமார் தனது இரங்கல் செய்தியில்.

”ரஷ்யா வாழ் இந்தியர்களின் விருப்பத்தை ஏற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் புகழ் பெற்ற கிரம்லின் மாளிகையில் தமிழ் மற்றும் இந்திய மொழிகளில்  குறிப்பாக ரஷ்ய மொழியிலும் சிறப்பாகப் பாடி எங்கள் நீண்ட நாள் கனவை நனவாக்கிய திரு எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மரணச்செய்தி நம் அனைவரையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது !!

அவருடைய  மறைவு உற்றார் உறவினர் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் இசைப்பிரியர்களுக்கு  ஒரு பேரிழப்பையும் இசை உலகில் ஒரு வெற்றிடத்தையும் ஏற்படுத்தி உள்ளது!

அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனைப்  பிரார்த்திக்கிறோம்”

எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு சில நாளிதழ்களில் எஸ் பி பி நீண்ட நாட்களாக ரஷ்யா செல்ல விரும்பியதாகவும் அவர் ஆசை நிறைவேறவில்லை எனவும் செய்திகள் வெளியாகின்றன.   இது தவறு என நிரூபிப்பது போல் இந்த செய்தி வெளியாகி உள்ளது.

எஸ் பி பி பாடிய ரஷ்யப் பாடல் இதோ

 

[youtube https://www.youtube.com/watch?v=Z1K7aFjS6sw?feature=youtu]