வாஷிங்டன்:

அமெரிக்கா வான் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் விரட்டி அடிக்கப்பட்டன.

வட அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் சர்வதேச வான் எல்லைக்குள் ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான இரு போர் விமானங்கள் நேற்று காலை அத்துமீறி நுழைந்தது.

இதை கண்டுபிடித்த அமெரிக்க போர் விமானங்கள் விரைந்து சென்று அந்த இரு விமானங்களையும் வழிமறித்து விரட்டியடித்தன. இத்தகவலை அமெரிக்கா விமானப்படை தளபதி மேஜர் ஆன்டுரு ஹென்னஸி தெரிவித்துள்ளார்.