மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 10, 131 ஆக உள்ளது. இங்கு ஒரே நாளில் 1,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்த எண்ணிக்கையானது, ரஷ்யாவில் ஒரே நாளில் உறுதி செய்யப்பட்ட அதிக பட்ச எண்ணிக்கையாகும். இதுவரை கொரோனாவுக்கு 63 பேர் உயிரிழந்த நிலையில் ஒரே நாளில் புதிதாக 13 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

ஒரு நாளில் 1,459 புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் கொரோனா தொற்று மொத்தம் 10,131 பேராக உயர்ந்துள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பலி எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிபர் விளாடிமிர் புடின் தீவிரபடுத்தி உள்ளார். நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் ஊரடங்கு .உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார நடவடிக்கைகளும் முன் எடுக்கப்பட்டு உள்ளன.