சென்னை:

நடிகர் சங்க டிரஸ்டி பதவியை எஸ்.வி.சேகர் ராஜினாமா செய்தார்.

2015-ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி சார்பில் போட்டியிட்டு எஸ்.வி.சேகர் டிரஸ்டி பதவியில் வெற்றி பெற்றார்.

2 ஆண்டு பதவிக்காலம் உள்ள நிலையில் தற்போது நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் மீண்டும் வர இருக்கிறது. இந்நிலையில் எஸ்.வி.சேகர் தனது டிரஸ்டி பதவியை ராஜினாமா செய்துள்ளார். நடிகர் சங்கத்தில் கையெழுத்து போடுவதற்கு தான் டிரஸ்டி பதவி என்ற நிலை உள்ளது என்று தனது ராஜினாமாவுக்கான காரணத்தை கூறியுள்ள சங்கம் தொடர்பாக தாம் கேட்ட கேள்விக்கு நிர்வாகம் பதில் தரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் பல்வேறு குளறுபடிகள் நடந்து விட்டது என்று அடுக்கடுக்கான குற்றம்சாட்டுக்களை சேகர் கூறியுள்ளார்.