பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பால் மருத்துவமனை யில் கவலைகிடமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய வேண்டி திரை யுலகினர் நாளை 20ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி 5 நிமிடம் அவரது பாடலை போட்டு எஸ்பிபிக்காக கூட்டு பிரார்த்தனை செய்கிறார்கள்.
எஸ்பி.பியை இறை சக்தி குணமாக்கும் என விஜய்யின் தந்தையும் இயக்குனரு மான எஸ்.ஏ. சந்திரசேகர் கூறி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலை யில், இருப்பதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், மருத்துவர்க ளையும் மிஞ்சிய சக்தி ஒன்று இருக்கிறது. அதுதான் இறை சக்தி, இறைவன். அவன் மீது நம்பிக்கை இருக்கிறது.
ஆயிரம் நிலவே வா என பாடி திரைத் துறைக்குள் அடியெடுத்து வைத்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், சீக்கிரம் குணமாகி மீண்டும் மைக்கை பிடித்து லட்சம் நிலவே வா என பாடுவார் .
இவ்வாற் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்,