திருவனந்தபுரம்: தமிழ் புத்தாண்டு, விஷு பண்டிகை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.

பக்தர்களின் தரிசனத்திற்காக ஏப்ரல் 18ம் தேதி வரை நடை திறக்கப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் வழக்கம் போல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

நாளொன்றுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.