சென்னை:

ண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கேரள மாநிலத்தில் உள்ள பிரபல சபரிமலை அய்யப்பன் கோவில்  நடை நாளை திறக்கப்பட உள்ளது. சுமார் 60 நாட்கள் தொடர் பூஜைகள் நடைபெற உள்ள நிலையில், இதுவரை 136 பெண்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி கோரி முன்பதிவு செய்துள்ளனர்.

சபரிமலை ஐய்யப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை 1ஆம் தேதியான நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 60 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்க அனைத்து வயது பெண்களுக்கும் செல்லாம் என ஏற்கனவே உச்சநீதி மன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், மேல்முறையீடு மனுமீதும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்காமல், 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றி உள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டு சபரிமலை அய்யப்பனை தரிசிக்க  136 பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், சபரிமலையில் போராட்டங்கள் நடைபெறாமல் தடுக்கவும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பலத்தை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு  சுமார் 700க்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலை செல்வதற்கு முன்பதிவு செய்திருந்த நிலையில், அங்கு  பெரும் பரபரப்பு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில், நடப்பு ஆண்டிலும் பல பெண்கள் சபரிமலைக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளது  மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.