மும்பை: ஆஸ்திரேலிய பேட்டிங் செட்டில் ஆகாத ஒன்றாக காட்சியளிக்கிறது என்றும், இந்திய பந்துவீச்சாளர்கள் முழு மதிப்பெண் பெறுவதற்கு தகுதியானவர்கள் என்றும் கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

அவர் கூறியுள்ளதாவது, “ஆஸ்திரேலிய அணியின் முந்தைய ஆண்டுகளின் பேட்டிங் வலிமையுடன் ஒப்பிடுகையில், தற்போதைய நிலையில், அந்த அணியின் பேட்டிங் செட்டில் ஆகவில்லை என்றே தெரிகிறது.

அவர்களின் பேட்டிங் எப்போதும் ஒரு தீர்க்கமானதாக இருக்கும். ஆனால், தற்போதைய நிலையில் அவ்வாறு இல்லை என்பது தெரிகிறது. தற்போதைய அணியில் பல வீரர்கள் ஃபார்மில் இல்லை. இப்போதைய பேட்டிங்கில் எந்த உத்தரவாதமும் இல்லை.

ஸ்டீவ் ஸ்மித்தை அஸ்வின் கையாண்ட விதம் அற்புதமாக இருந்தது. அஸ்வின் தனது பந்துவீச்சில் புதுமையைக் கையாள்கிறார். கடந்த இரண்டு போட்டிகளிலும் அவர் வெற்றிகரமானவராக இருக்கிறார்.

நமது அணியின் அற்புதமான செயல்பாடாகும் இது. ரஹானேவின் கேப்டன்சி மிகுந்த பாராட்டுக்குரியது” என்றுள்ளார் சச்சின்.