கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை இயக்கியவர் சச்சி. இந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இந்த படம் தமிழ் ரீமேக்கில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் சச்சி பேட்டியொன்றில் தெரிவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது .

தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த சச்சி, நேற்றிரவு (ஜூன் 18) சிகிச்சை பலனின்றி காலமானார்.

தமிழ் ரீமேக்கில் கோஷி கதாபாத்திரத்தில் கார்த்தியும், அய்யப்பன் நாயர் கதாபாத்திரத்தில் பார்த்திபனும் நடித்தால் நன்றாக இருக்கும்.

பார்த்திபன் ஒரு சுவாரசியமான நடிகர். அவரது நடிப்பை சில காலங்களாகப் பின் தொடர்ந்து வருகிறேன். தமிழ் ரீமேக்கில் இவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தி ரீமேக்கில் பிஜு மேனன் கதாபாத்திரத்தில் நானா படேகரும், ப்ரித்விராஜ் கதாபாத்திரத்தில் ஜான் ஆபிரஹாம் அல்லது அபிஷேக் பச்சன் நடித்தால் நன்றாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் சச்சி. இதில் ஜான் ஆபிரஹாம்தான் ‘அய்யப்பனும் கோஷியும்’ இந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.