சென்னை:

விஜய் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து பத்மநாபன் ராஜினாமா செய்துள்ளார்.

 

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி., `விஜய் மக்கள் இயக்கம்’ என்கிற அமைப்பைத் தொடங்கி, சமீபத்தில் அதை தேசியக் கட்சியாக டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்ய விண்ணப்பித்தார். திருச்சியைச் சேர்ந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் பத்மநாபன் என்ற ராஜாவை மாநிலத் தலைவராகக்கொண்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால், தந்தையின் இந்த அரசியல் நடவடிக்கை பிடிக்காத நடிகர் விஜய் ‘தனக்கும் இந்தக் கட்சிக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை” என்று அறிவித்தார். அந்தக் கட்சியில் பொருளாளராக நியமிக்கப்பட்ட விஜய்யின் தாயார் ஷோபாவும் கட்சியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

இந்தநிலையில், `தான் உயிருக்கு பயந்து தலைமறைவாக வாழ்ந்துவருவதாகவும், தனக்கோ தனது குடும்பத்தாருக்கோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்குக் காரணம் புஸ்ஸி ஆனந்த்தான்’ என்று வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் பத்மநாபன் என்ற ராஜா. இந்தநிலையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தொடங்கிய கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துகொள்வதாக அறிவித்திருக்கிறார்.