புதுச்சேரி
புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை மீது  காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால்,  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவி துண்டை அணிவித்தவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் பெரியால் சிலை மீது காவி பெயின்ட் ஊற்றி பிரச்சினை ஏற்படுத்தப்பட்ட நிலையில், புதுச்சேரியில், எம்ஜிஆர் சிலை மீது காவி துண்டு அணிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் -விழுப்புரம் சாலையில் எம்ஜிஆர் சிலை உள்ளது. இந்த சிலை மீது  காவித்துண்டு அணிவித்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சாலையில்அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன் , வையாபூரி மணிகண்டன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீஸ் பேச்சுவார்த்தைக்கு பின்னர் எழுந்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.