சென்னை: 
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி இன்று (ஜூலை 31)காலமானார். அவருக்கு வயது 81.
விசாரணை கமிஷன் என்ற நாவலுக்கு 1998-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி சில நாட்களாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு சசென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.‘
இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்தவரான கந்தசாமி 1968 ம் ஆண்டு எழுதிய சாயாவனம் என்ற நாவல் மூலம் தமிழக இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர்  என்பது குறிப்பிடத்தக்கது.