பாலிவுட்டில் முன்னணி நடிகராகத் திகழ்பவர் சைஃப் அலிகான். நடிகை ஷர்மிளா தாகூரின் மகனான சைஃப் அலிகான் 1993 ஆம் ஆண்டு வெளியான ‘பரம்பரா’ படத்தின் மூலம் பாலிவுட் உலகில் அறிமுகமாகிறார் .

கடந்த சில மாதங்களாக தன்னுடைய வாழ்க்கையில் நடந்த முக்கியத் தருணங்களை சைஃப் அலிகான் புத்தகமாக எழுதிவந்தார்.இப்புத்தகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது .

அடுத்ததாக யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘பன்ட்டி ஆர் பப்ளி- 2’, பவன் கிரிபலானி இயக்கத்தில் உருவாகும் ‘பூத் போலீஸ்’ ஆகிய படங்களில் நடிக்கிறார் சைஃப் அலிகான்.