சென்னை: 100 நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊதியம் ரூ.229 என்பதிலிருந்து ரூ.256 என்பதாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவிலிருந்து 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், முகக் கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 100 நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான ஒரு நாள் ஊதியம் ரூ.229 இலிருந்து ரூ.256 என்பதாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ள தமிழக அரசு, இந்த உயர்வு ஏப்ரல் 1 முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.