சேலம்: தமிழகத்தில் சிறந்த காவல்நிலையமாக சேலம் டவுன் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான விருது, குடியரசு தினத்தன்று வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான செயல்பாடு,  மக்கள் பிரச்சினை,  மகளிர்களுக்கு எதிரான பிரச்சனை, சொத்து பிரச்சனை உள்பட பல்வேறு அம்சங்களை கையாள்வதை வைத்து சிறந்த காவல்நிலையங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. அதன்படி, தமிழகத்தில்,  சிறந்த காவல் நிலையமாக சேலம் டவுன் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

சேலம் டவுன் காவல்நிலையத்திற்கு 5,558 புள்ளிகள் கிடைத்துள்ளது. இதுவே அதிகபட்சமான புள்ளிகள் என்பதால், சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த காவல்நிலையம் சார்பாக,  காவல் ஆய்வாளர் குமாருக்கு குடியரசு தினத்தன்று  முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்குகிறார்.

கடந்த ஆண்டு நாட்டிலேயே சிறந்த காவல்நிலையங்களில் 2வது இடத்தைசேலம் சூரமங்கலம் மகளிர் காவல்நிலையம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.