பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வரும் படம் ‘ராதே’.இப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் சல்மான் கான் கோவா சென்றிருந்தார்.

அங்கு விமான நிலைய ஊழியர் ஒருவர் சல்மான் கானின் அனுமதி இல்லாமல் தனது மொபைல் போனில் செல்ஃபி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

இதனால கோபமடைந்த சல்மான்கான் இதனால கோபமடைந்த சல்மான்கான் பிடுங்கி கொண்டு வேகமாக சென்றார் .

இந்தக் காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் நேற்று (28.01.20) வைரலானது. நெட்டிசன்கள் பலரும் சல்மான் கானின் இந்தச் செயலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் சல்மான் கானுக்கு காங்கிரஸின் மாணவர் அணியான இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI) கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தலைவர் அஹ்ராஸ் முல்லா, கோவா முதல்வர் ப்ரமோத் சாவந்துக்கு கடிதம் எழுதியுள்ளார் .