தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் நடிகை சமீரா ரெட்டி.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த அக்ஷய் வர்தே என்கிற தொழில் அதிபரை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், மீண்டும் 4 ஆண்டுகள் கழித்து சமீரா இரண்டாவது முறையாகக் கர்ப்பமானார். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் சமீராவுக்கு மும்பையில் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கர்ப்பிணியாக நீருக்குள் போட்டோஷூட் எடுத்த புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.