தினமும் காலையில் நடக்கும் டாஸ்கில் சோம் சேகர் குமாரு என்ற வார்த்தையை எத்தனை மாடுலேஷனில் பேசலாம் என பேசி காட்டினார். அதில் அவர் பேசியது பற்றி சனம் ஷெட்டி கோபத்துடன் பேசினார். மேலும் அர்ச்சனா bossy குமாரு என கேபி கூறியதால் அவர் அதிக நேரம் கோபத்துடன் இருந்தார்.

கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக பேசிய போட்டியாளர்கள் மற்றும் தங்கள் முழு முயற்சியையும் வெளிக்காட்டாமல் டாஸ்கை மேற்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் ஒன்றில் இருந்து 13 வரை வரிசைப்படுத்த வேண்டும் என்கிற டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், டாஸ்க் ரேங்க்கிங் குறித்த பஞ்சாயத்தால் பரபரப்பாகிறது பிக்பாஸ் வீடு. நான் நல்ல கன்டென்ட் கொடுத்தேன்…எனக்கு தான் முதல் இடம் என்று சண்டை போடுகிறார் அர்ச்சனா. இப்படியிருக்க ரம்யா, அனிதா, ரியோ, ஆஜீத் மற்ற இடங்களில் நிற்கின்றனர். இதனால் இந்த வார எவிக்ஷனில் நிறைய ட்விஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.