கடந்த ஒரு மாதமாக கர்நாடகாவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் அதனை பயன்படுத்திய கும்பல் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத விசாரணையின் படி கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் போதை மாத்திரைகளை விற்ற இந்தி நடிகரும் நடன இயக்குநருமான கிஷோர் அமன் ஷெட்டி, அவரது நண்பர் தருண் ராஜ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கன்னட தொலைக்காட்சி நெறியாளரும் நடிகையுமான அனுஸ்ரீக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்த நிலையில் மங்களூரு குற்றப்பிரிவு போலீஸார் முன்பு அனுஸ்ரீ நேற்று காலை 11 மணியளவில் ஆஜரானார்.