mopbile-app
டில்லி,
ந்திய ராணுவ வீரர்களுக்கு  தீபாவளி வாழ்த்து தெரிவிக்க  மொபைல் ஆப்-ஐ பிரதமர் மோடி அறிமுகம் செய்து வாழ்த்து தெரிவித்தார்.
ராணுவ வீரர்களுக்கு, பொதுமக்களும் தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதற்காக மொபைல் ஆப் ஒன்றை பிரதமர் மோடி தொடங்கி வைத்து  எல்லையில் நாட்டை காக்கும் வீரர்களுக்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
modi1
மேலும் அவர் நாட்டு மக்கள்  அனைவரும் ராணுவ வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறும் வகையில் மொபைல் ஆப் ஒன்றை தொடங்கி வைத்துள்ளார். சந்தேஷ் டூ சோல்ஜர்ஸ் (Sandesh2Soldiers )என்ற பெயரில்  இந்த மொபைல் ஆப்-ஐ பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில்,
எனது அரசு வலைத்தளம் மூலமாக ராணுவ வீரர்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தீபாவளி வாழ்த்து  சொல்வதற்காக சந்தேஷ் டூ சோல்ஜர்ஸ் என்ற மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்துள்ளேன்.  இதன் மூலம் நமது ராணுவ வீரர்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துகளை  தெரிவித்துக் கொள்கிறேன்.
2-diwali-greetings
நமது வீரர்களின் தீரத்தை போற்றும் வகையில் நீங்களும் வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவியுங்கள். நாட்டில் உள்ள 125 கோடி  மக்களும் வாழ்த்தினால் வீரர்களின் பலம் 125 கோடி மடங்கு அதிகரிக்கும் என அதில் தெரிவித்துள்ளார்.
இது தவிர இந்த வேண்டுகோளை குறிப்பிட்டு வீடியோ ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ சில மணி நேரங்களுக்குள் பேஸ்புக், டூவிட்டர்  உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதே போல் ஆல் இன்டியா ரேடியா சார்பில் அஞ்சல் அட்டை மூலமாக எல்லை பகுதியில் உள்ள  வீரர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பும் வசதியை தொடங்கி உள்ளது.
பிரதமராக பதவியேற்ற பிறகு மோடி கடந்த இரண்டு தீபாவளியை எல்லையில் உள்ள ராணுவ  வீரர்களுடன் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.