ஐதராபாத்: ஹோபர்ட் டென்னிஸ் தொடரில், மகளிர் கலப்பு இரட்டையர் பிரிவில் கோப்பை வென்ற இந்திய நட்சத்திரம் சானியா மிர்ஸா, தனது மகிழ்ச்சியான தருணம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தனது மகன் இஷானை இடதுபக்க இடுப்பிலும், வலது கையில் டென்னிஸ் பேட்டையும் வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் அவர்.

அந்த புகைப்படம் குறித்து அவர் கூறியுள்ளதாவது, “இந்தப் புகைப்படத்தில் எனது வாழ்க்கை அடங்கியுள்ளது. எனக்கு இதுதான் அனைத்துமே. பல்வேறு விஷயங்களில் இஷான் எப்போதும் என்னை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறான்.

எனக்கான முக்கியத் தூண்டுகோலாக திகழ்கிறான். இந்தோனேஷியாவுக்கு எதிரான முக்கியத்துவம் வாய்ந்தப் போட்டிக்கு முன்னதாக, என் புதல்வன் இஷானுடன் நேரம் செலவிட்டது சிறப்பான ஒரு விஷயம்” என்று நெக்குருக கூறியுள்ளார் சானியா மிர்ஸா.