னிப் பெயர்ச்சி 2017 : கும்ப ராசிக்கான பலன்கள்

கும்ப ராசிக்காரர்களுக்கு இதுவரை 10ஆம் இடத்தில் இருத்த சனி பகவான் 19.12.17 முதல் 26.12.20 வரை  லாப வீட்டில் அமர்ந்து பலன்களை தர உள்ளார்.  எல்லாவற்றிலும் உங்கள் கை இனி ஓங்கி நிற்கும்.   மனதில் தெளீவு,  திடீர் அதிர்ஷ்டம், குறைவற்ற பண வரவு ஆகியவற்றால் குதூகலம் அதிகரிக்கும்.

பெரிய மனிதர்களின் நட்பு,  கணவன் – மனைவி உறவு பலப்படுதல், புது வீடு யோகம் குழந்தை பாக்கியம், மகளின் திருமணம்,  மகனின் வெளிநாட்டுக் கல்வி,  சகோதரியின் திருமணம்   புதி நகை வாங்குவது பெரிய பதவிகள்,  அரசாங்க உதவி ஆகியவைகளுக்கு வாய்ப்புண்டு.

சனி பகவான் உங்கள் ராசியைப்  பார்ப்பதால் கோபத்தையும் டென்ஷனையும் தவிர்க்கவும்..  முக்கிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் வேண்டாம்.   உடல்நிலையில் கவனம் தேவை.    பீள்ளைகளின் போக்கை கூர்ந்து கவனிக்கவும்.   அயல்நாட்டுப் பயணத்தில் நன்மைகள் நேரிடலாம்.

வியாபாரிகளுக்கு தேங்கிக்கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும்.   பணியாளர்களிடம் ஒற்றுமை காட்டவும்.  லாபம் அதிகரிக்கும்.   கடையை விரிவுபடுத்தல், வெளிநாடு வர்த்தகம், ஆகியவை நடக்க வாய்ப்பு உண்டு.   ரியல் எஸ்டேட், பிரிண்டிங், சிமிண்ட் வர்த்தகர்களுக்கு லாபம் உண்டு

உத்தியோகஸ்தர்களுக்கு உந்தலின் நிர்வாகத் திறமை கூடி புது வாய்ப்புகளும் பொறுப்பும் கிடைக்கும்.  சம்பள உயர்வு தடையின்றி கிடைக்கும்.

மாணவர்கள் மற்றும் மாணவிகள் படிப்பில் கவனம் கூடும்.  நல்ல மதிப்பெண்கள் தடையின்றி கிடைக்கும்.   விளையாட்டில் கவனம் செலுத்தினால் முதலிடம் வர வாய்ப்புண்டு.

கலைத்துறையினருக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.   வராத தொகை வந்து சேரும்

இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் தடுமாறிக் கொண்டிருந்த நீங்கள் தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.

மூல நட்சத்திரத்தில் 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார்.  இந்த தினங்களில் பழுதான வாகனத்தை கொடுத்து விட்டு புது வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.   பணவரவு அதிகரிப்பது போல செலவுகளும் அதிகரிக்கும்.   ஜாமீன் கையெழுத்து,  வழக்கு தொடர்வது ஆகியவைகளை தவிர்க்கவும்.

பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரையிலான தேதிகளில் சனி சஞ்சாரம் செய்கிறார்.  இந்தக் காலத்தில் அரைகுறையாக விட்டுப் போன வேலைகள் நன்கு முடியும்.   பழைய பாக்கிகள் வசூல், திடீர் பயணங்களால் உற்சாகம்,  பெற்றோருடன் மீண்டும் சுமுக உறவு ஆகியவைகள் நிகழும்.

உத்திராடம் நடத்திரம் முதல் பாதத்தில் 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனி பகவான் சஞ்சரிக்கிறார்.  இந்த கால கட்டத்தில்  உடல்நிலை மற்றும் வாழ்க்கைத்துணையுடன் வாக்குவாதங்களால் துயரம் நேரிடும்.

வக்கிரச் சனி பலன்கள்

மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் வக்கிரமாக செல்கிறார்.  இந்த நேரத்தில் நின்று போன வேலைகளை முடித்தல்,  சொந்த வீடு யோகம் ஆகியவை நிகழும்.

பூராட நட்சத்திரத்தில் 10.5.19 முதல் 11.8.19 வரை, 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை சனிபகவான் வக்கிர சஞ்சாரத்தில் உள்ளார்.  இந்த நேரத்தில்  உடல் ஆரோக்யத்தில் மிகுந்த கவனம் தேவை

உத்திராடம் நட்சத்திர முதல் பாதத்தில் 2.5.20 முதல் 16.7.20 வரை சனிபகவானின் வக்கிர சஞ்சாரம் இருப்பதால்  தொட்டது துலங்கும்.   அனைத்து துறைகளிலும் வெற்றி வாய்ப்பு கிட்டும்.

பரிகாரம் :   ஏகாதசி தினத்தன்று திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில்  உள்ள ஸ்ரீ ஆதிகேசவ பெருமாளை வழிபட்டு  வர வேண்டும்.