ந்தி நடிகர் சஞ்சய் தத், சுவாசக்கோளாறு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவ மனையில் கடந்த 8 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் ஆனார்..


சஞ்சய்தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்ததால், சிகிச்சைக் காக அவர் அமெரிக்கா செல்ல விருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை உறுதி செய்யும் விதமாக ‘’மருத்துவ காரணங்களால், படப்பிடிப்புக்கு கொஞ்சகாலம் ஓய்வு கொடுக்கிறேன்’’ என அவரும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, சஞ்சய் தத், அமெரிக்காவில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற 5 வருட மருத்துவ விசா கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
அவருக்கு தற்போது விசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், கோகிலாபென் மருத்துவமனையில் இருந்து முழுமையான ரிசல்ட் வந்த பின்னரே சஞ்சய் தத், அமெரிக்கா செல்வார் என தெரிகிறது.

-பா.பாரதி.