பெங்களுருவில் கடந்த ஆண்டு போதைபொருள் விற்கும் ஒரு கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி விசாரணைக்கு அழைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பெங்களூர் பரப்பன அக்ஹாரா சிறையில் ராகினி, சஞ்சனா இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

பிறகு இருவரும் தனித்தனியாக வேறு அறைகளில் உள்ள பெண் கைதியுடன் அடைக்கப்பட்டனர். கைதாகி சிறையிலிருந்த ராகினி தனக்கு ஜாமீன் வழங்கும்படி கீழ்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஜாமீன் கிடைக்காததால் . சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார்.

இதற்கிடையில் சஞ்சனா கல்ராணி தனது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு சிகிச்சை பெற வேண்டி தன்னை ஜாமீனில் விடுவிக்க கேட்டார். அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியதில் டாக்டர்கள் அவரது உடல்நிலையில் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து சஞ்சனாவுக்கு நிபந்தனை வழங்கப்பட்டது. 90 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு அவர் ஜாமீனில் வந்து வீட்டிலிருந்த படி சிகிச்சை பெற்று வருகிறார். சஞ்ஜனாவை நலம் விசாரித்து அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் மெசேஜ் அனுப்பி வருகின்றனர்.

என்னிடம் இன்ஸ்டாமிரமில் ஏராளமானவர்கள் நலம் விசாரித்துள்ளனர். அதற்கு நன்றி. 1 மில்லியன் ரசிகர்கள் என்னை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளனர். உடல்நிலை சரியான பிறகு விரைவில் நான் சமூக வலைதள பக்கத்துக்கு வருவேன். என பதிவிட்டுள்ளார்.