இயக்குநர் சத்யன் அந்திக்காடு மகன்சத்யன் அனூப் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வரனே ஆவஷ்யமுண்ட்’ . இந்த படத்தில் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவனின் மகன் சர்வஜித் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மலையாள சினிமாவை சேர்ந்த சந்தோஷ் சிவன் ரஜினியின் தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். நீண்ட வருடங்களுக்கு பின் அண்மையில் தர்பார் படம் மூலம் மீண்டும் ரஜினியுடன் இணைந்தார்.மேலும் விஜய்யின் துப்பாக்கி, சூர்யாவின் அஞ்சான் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் நடிகர்கள் சுரேஷ் கோபியும், ஷோபனாவும் இணைந்துள்ளனர் .

கல்யாணி ப்ரியதர்ஷன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஷோபின் சாஹிர், ஊர்வசி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சந்தோஷ் சிவனின் மகன் சர்வஜித் இப்படத்தில் நடிப்பது அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.