சென்னை
800 திரைப்படத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளதை நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கண்டித்துள்ளார்.

பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதையை 800 எனத் திரைப்படமாக எடுக்க உள்ளனர்.
இதில் விஜய் சேதுபதி முரளிதரன் வேடத்தில் நடிக்க உள்ளார்.
முரளிதரன் இலங்கைத் தமிழருக்கு விரோதமாக இருந்ததால் இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இது குறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார்,
“காந்தி திரைப்படத்தை விரும்பி ரசித்ததைப் போல் ஹிட்லர் படத்தையும் மக்கள் விரும்பி ர்சித்தன்ர்
கலைத் துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது”
எனக் கருத்து தெரிவித்துள்ளார்.