சென்னை:

றைந்த சரவணபவன் ஓட்டல் அதிபர்  ராஜகோபால் உடல், அவரது சொந்த ஊரான  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புன்னை நகரில்  நாளை மறுதினம் (சனிக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொலைவழக்கு ஒன்றில், குற்றவாளியான ராஜகோபால், உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஆம்புலன்சில் வந்து கோர்ட்டில்  சரணடைந்தார். அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததை தொடர்ந்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலை யில், நேற்று காலை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தெரிவித்தது.

இந்த நிலையில், மறைந்த சரவணபவன் ராஜகோபால் உடல் இன்று மாலை 6 மணி முதல் நாளை மதியம் வரை அவரது கே.கே.நகர் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், அதன்பிறகு அவரது உடல்  சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

நாளை மறுதினம் பிற்பகல்  (சனிக்கிழமை) அவரது சொந்த ஊரான புன்னை நகரில், உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் ராஜகோபால் குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.