மதுரை:

திமுக வில் மீண்டும் சசிகலா சேர்வதை, அதிமுக பொதுக்குழுதான் தீர்மானிக்கும் என தமிழக துணைமுதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான  ஓபிஎஸ் கூறினார்.

மருது சகோதரர்களின் 218ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கிராமத்தில் அமைந்துள்ள மருது சகோதரர்கள் சிலைகளுக்கு  துணை முதல்வர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். பின்னர் அதிமுகவில் மீண்டும் சசிகலா இணைந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு ‘தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றரைக் கோடி தொண்டர்களின் இசைவைப் பெற்றுதான் அந்த குடும்பத்தைக் கட்சியை விட்டு நீக்கினோம். அவர்களை அதிமுகவில் இணைக்கச்சொல்லி கேள்வி எதுவும் எழவில்லை. அப்படி எழுமாயின் அதைத் தீர்மானிக்கக் கூடிய மிகப்பெரிய சக்தியாக பொதுக்குழுதான் இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.