சென்னை:

திமுக சட்டமன்ற தலைவராக சசிகலாவை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை அதிமுக தலைமைநிலையத்தில் இன்று பிற்பகல் நடந்த அதிமுக  எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலாவை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலாவின் பெயரை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார்.   இதனைத் தொடர்ந்து அவர் சட்டசபைக் குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  அதைத்தொடர்ந்து சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து விரைவில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை கொடுப்பார் என தெரிகிறது. அதைத்தொடர்ந்து அவர் முதல்வராக பதவி ஏற்பார்.

இன்று காலை போயஸ்கார்டனில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் முதல்வர் பன்னீர் செல்வத்திடம் இருந்து ராஜினாமா கடிதம் பெற்றப்பட்டதாக தெரிகிறது.

வரும் பிப்ரவரி 9ந் தேதி தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்பார் என கூறப்படுகிறது.