சிகலாவை முதல்வராக தேர்ந்தெடுப்பது என்பது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம்.அதில் பிறர் தலையிட முடியாது” என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

மேலம் அவர், “ஜனநாயக  விழுமியங்களையும் அரசியலமைப்பு சட்டங்களையும் மதித்து கவர்னர் நடக்க வேண்டும்.  சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கக் கூடாது என்பதற்காக தமிழகம் வராமல் இருப்பது தவறு. பாஜக பிரதமர் மோடி, இந்த விசயத்தில் ஜனநாயகத்தை காக்கும் வகையில் நடக்கவில்லை.” என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.