சென்னை,

திமுக சட்டமன்ற குழுதலைவராக தேர்வு செய்யப்பட்டு, முதல்வர் பதவியை எதிர்நோக்கி இருக்கும் சசிகலாவை மக்கள் ஏற்க மாட்டார் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர்  கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்- அமைச்சராக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களால் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட தினம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கருப்பு நாள்.

அவரை முதல்- அமைச்சராக தேர்ந்தெடுக்க கூட்டப்பட்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் அவர்களின் முகங்களைக் காணும் பொழுது எவ்வித மகிழ்ச்சியோ, உற்சாகமோ இல்லாமல் ஏதோ தவறு செய்து விட்ட தோற்றத்தைக் காண முடிந்தது.

அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்களும், தமிழக மக்களும் எக்காலத்திலும் சசிகலாவை முதல்- அமைச்சராக ஏற்க மாட்டார்கள்.

பொய்மையும், கயமையும் வென்றதாக வரலாறு இல்லை. நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் அவரை தமிழக மக்கள் படுதோல்வி அடையச் செய்வார்கள் என்பது உறுதி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.