சென்னை:
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா நாளை வந்து சில கோப்புகளில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து நேற்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். செயற்குழுவின் இந்த தீர்மானத்தை ஏற்று பொறுப்பேற்பதாக சசிகலா கூறியிருந்தார். இந்நிலையில் இன்று ஜெயலலிதா சமாதிக்கு சென்று தீர்மான புத்தகத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து நாளை காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா செல்கிறார். அங்கு பொதுச் செயலாளர் என்ற முறையில் சில கோப்புகளில் கையெழுத்திடுகிறார்.
இதற்காக அங்குள்ள ஜெயலலிதாவின் அறை சசிகலாவுக்கு தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுச் செயலாளராக முழு பொறுப்பையும் ஜனவரி 2ம் தேதி சசிகலா ஏற்பார் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.