எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார் சசிகலா
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார் சசிகலா
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகிறார்கள்.
இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, அதிமுக பொது செயலாளர் சசிகலா, மாலையிட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அலுவலகத்துக்கு வந்தவுடன், , முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போலவே அலுவலக மாடியில் இருந்து தொண்டர்களுக்கு வணக்கம் தெரிவித்து, இரட்டை இலை சின்னத்தை காட்டினார் சசிகலா. பிறகு
அவருடன் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், அவை தலைவர் மதுசூதனன், அமைச்சர் பெஞ்சமீன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட பலர் இருந்தனர்.