பெங்களுரூ:
சிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை என்று விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை என்றும், இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை எனமருத்துவமனையின் அறிவிப்பால் சசிகலா ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து சசிகலா, பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 3-ஆம் தேதி அண்ணா நினைவு நாளன்று சென்னை திரும்பும் சசிகலா சென்னை வந்ததும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்த உள்ளதாகவும் அதனைத்தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள எம்.நடராஜன் நினைவிடத்திற்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.