பெங்களூரு: சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாகவும், உதவியாளர்களின் உதவியுடன் அவர் எழுந்து நடப்பதாகவும் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு: சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாகவும், உதவியாளர்களின் உதவியுடன் அவர் எழுந்து நடப்பதாகவும் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:  சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்து உள்ளன. அவரது நாடித்துடிப்பு, ரத்தக் கொதிப்பு அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளன.

அவர் சுயநினைவுடன் இருக்கிறார். உணவை இயல்பாக எடுத்து கொள்கிறார். உதவியாளர்களின் உதவியுடன் அவர் எழுந்து நடக்கிறார். வழக்கமாக கொரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையே சசிகலாவுக்கு அளிக்கப்படுகிறது. தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.