பெங்களூரு: சிகிச்சை பெற்றுவரும்  சசிகலா நலமாக இருப்பதாக விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக சிறை வளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு, சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் கடந்த 20ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சசிகலாவின் உடல்நிலையில் சிகிச்சைக்கு பிறகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பவுரிங் மருத்துவமனை இயக்குநா் மனோஜ்குமார் நேற்று தெரிவித்தார்.

பின்னர் கே.ஆா்.சந்தை பகுதியில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு சசிகலா மாற்றப்பட்டார். அங்கு சசிகலாவுக்கு நடத்தப்பட்ட சோதனைகளில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந் நிலையில் இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலா தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் நன்றாக சுய நினைவுடன் இருக்கிறார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.