பெங்களுரூ:
சிகலா நாளை காலை 10 மணி அளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி 27 ஆம் தேதி காலையில் 4 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விடுதலையானார்.

அவருக்குச் சிறையிலிருந்தபோது,கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால் சிலநாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இன்னும்சில நாட்களில் தமிழகத்திற்கு அவர் வரவுள்ளதாகந்தகவக் வெளியானது.

மேலும், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் நாளை காலை 10 மணிக்கு சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்வுள்ளதாகத் தெரிவித்துள்ளது.