பெங்களுரூ:
சிகலா உடல்நிலை சீராக உள்ளது என்று பெங்களுரூ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சசிகலாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் அதிமுகவின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளருமான சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் இன்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் சசிகலா ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாவார் எனக் கூறப்பட்ட நிலையில் அவருக்கு நேற்று கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது.

பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் தீவிர நுரையீரல் தொற்று இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம் செய்யபட்டார். இந்நிலையில் விக்டோரியோ மருத்துவமனை இன்றிரவு வெளியிட்ட அறிக்கையில், “சசிகலாவின் உடல்நிலை சீராக இருக்கிறது. வெண்டிலேட்டர் போன்ற எந்தவித செயற்கை சுவாசக் கருவிகளும் பொருத்தப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.