தூத்துக்குடி:
கோவில்பட்டி சிறைக்கு வந்தபோது தந்தை – மகன் உடலில் காயங்கள் இருந்ததாக சிறைக்கைதி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சாத்தான்குளம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவல் நிலையத்திலேயே வைத்து அடித்துக் கொல்லப்பட்டனர். தமிழகத்தை உலுக்கிய இவ்வழக்கில் சிபிசிஐடியினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறைக்கு வந்தபோது உடலில் காயங்கள் இருந்ததாகவும், சிறையில் இருவரின் காயங்களுக்கும் மருந்திடப்பட்டதாகவும், கோவில்பட்டி சிறைக்கைதி ராஜா சிங் தூத்துக்குடி மாவட்ட நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.