சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு காரணமாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரி உள்பட தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழகஅரசு இடம்மாற்றம் செய்து அறிவித்து உள்ளது.
தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் காத்திருப்பு பட்டியலில் இருந்த அருண் பாலகோபாலன் சென்னை கிரைம் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை விவகாரம் தொடர்பாகவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இருந்த அருண் பாலகோபாலன், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது .
சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜியாக ஓம்.பிரகாஷ் மீனா, சிபிசிஐடி சைபர் பிரிவு எஸ்.பியாக சிபி சக்ரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக கண்ணம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்.பியாக ஜெயலட்சுமி நியமனப்பட்டுள்ளார்.
கமாண்டோ படை எஸ்.பியாக ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நில அபகரிப்பு தடுப்பு பிரிவு எஸ்.பி – ஷியாமளாதேவி நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.