சாத்தான் குளம் தந்தை மகன் போலீஸாரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. அரசியல் கட்சியினர், திரையுலகத்தினர் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இச்சம்பவம் தொடர்பாக ஒருபடி மேலேபோய் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார் நடிகை சனம் ஷெட்டி.
அவர் அளித்துள்ள புகாரில் இந்த கொடூர செயலை செய்த போலீசார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருப்பதுடன் மற்றவர்களும் மனித உரிமை ஆணையத்தில் இது குறித்து புகார் அளிக்க கேட்டிருக்கிறார்
நடிகை சனம் ஷெட்டி அம்புலி, கதம் கதம், சவாரி, வால்டர் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.