மதுரை:
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாத்தான்குளம் தந்ததை மகன் கொலை வழக்கை முதலில் விசாரித்த சிபிசிஐடி போலீசார், சந்தேக மரணம் என்ற பெயரில்  ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10போலீசாரை செய்து வழக்குப்பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. விசாரணையைத் தொடர்ந்து ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட போலீசார்மீது கொலை வழக்கமாக மாற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக சிறையில் அடைக்கப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 பேரை தங்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்தியது.  பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்தும்போது ஆய்வாளர் ஸ்ரீதர் தனக்கு முதுகு பின் தண்டுவடத்தில் வலி இருப்பதாகவும், அதனால் தன்னை மருத்துவமனையில் சிகிக்சை பெற அனுமதிக்கவேண்டும் என நீதிபதியிடம் முறையிட்டார்.
இதைத்தொடர்ந்து, நீதிபதி சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தினார். இந்த நிலையில்,  ஆய்வாளர் ஸ்ரீதருக்கு முதுகு பின்தண்டுவடத்தில் வலி அதிகமாக ஏற்பட்டதாக கூறி, ர் மதுரை ராஜாஜி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு பரிசோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ராஜாஜி  மருத்துவமனையில் சிகிக்சை பெறுவாரா..? அல்லது சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சை பெறுவாரா..? என்பது மருத்துவர்கள் அளிக்கும் முடிவில் உள்ளது.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட காவலர்களிடம் விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள் இரண்டு பேருக்கு கொரோனா உறுதியானது பரபரப்பை ஏற்பட்டு உள்ளது. இதனால், சிறையில் உள்ள போலீசாரிடமும்  கொரோனா சோதனை  செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.  ஸ்ரீதர்  உண்மையிலேயே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா அல்லது,  அரசியல்வாதிகள் போல சிறைவாசத்தில் இருந்து தப்பிக்க மருத்துவமனையில் தஞ்சம்புகுந்துள்ளாரா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.