சசிகலா புஷ்பா மற்றும் சத்தியப்பிரியா – ராமசாமி

 

டில்லி:தமது முதல் திருமணத்தை மறைத்துவிட்டு 2-வது மனைவி சத்யபிரியா பணம் கேட்டு மிரட்டுவதாக சசிகலா புஷ்பாவின் 2-வது கணவர் ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இரு நாட்களுக்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, ராமசாமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே திருமணமான சசிகலா புஷ்பா முதல் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று இந்த இரண்டாவது திருமணத்தை செய்துகொண்டார்.

இந்த நிலையில் சத்யப்பிரியா என்பவர், ராமசாமி தன்னை திருமணம் செய்துகொண்டதாகவும் தற்போது ஏமாற்றிவிட்டு சசிகலாபுஷ்பாவை திருணம் செய்துகொண்டார் என்றும் புகார் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே இவர் நீதிமன்றத்தையும் நாடினார். நீதிமன்றம் ராமசாமி – சசிகலா திருணத்துக்கு தடை விதித்தது. ஆனாலும் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் சத்யப்பிரியாவுக்கு முன்பே ராமசாமி ஒரு திருணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில் ராமசாமி டில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “என் மீது புகார் கூறும் சத்தியப்பிரியா ஏற்கெனவே திருமணமானவர்” என்று கூறினார்.

மேலும், “சத்தியப்பிரியா, என் முதல் மனைவியின் குழந்தையை அடித்து துன்புறுத்தினார். சத்தியப்பிரியாவுடன் வரும் மணிகண்டன் என்பவர்தான் அடித்தார்” என்றும் தெரிவித்தார்.